
பொதுவாகவே வீடு துடைக்கும் போது அழுக்கு போவதற்காக சில பொருட்களை தண்ணீரில் சேர்த்து துடைப்போம். அவ்வாறு செய்யும்போது கொசு தொல்லையில் இருந்து விடுபட சில பொருட்களை தண்ணீரில் கலந்து வீட்டை துடைக்கலாம். அதாவது வினிகரை தண்ணீரில் கலந்து வீட்டை துடைக்கும் போது பூச்சிகள் மற்றும் கொசு பிரச்சனைகள் இல்லாமல் தரை பளபளப்பாக இருக்கும்.
அத்யாவசிய லாவெண்டர் எண்ணெய், மிளகு கீரை எண்ணெய் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து துடைத்தால் பூச்சி மற்றும் கொசு தொல்லை இருக்காது. தண்ணீரில் சிறிது லவங்கப்பட்டையை போட்டு கொதிக்க வைத்து வீட்டை துடைத்தால் வீட்டில் அழுக்கு போவது மட்டுமல்லாமல் ஈக்கள் மற்றும் கொசுக்களில் இருந்தும் தப்பிக்கலாம். பாத்திரம் கழுவும் சோப்பை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தாலும் கொசு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சோப்பு தண்ணீரைக் கொண்டு துடைத்த பிறகு சாதாரண தண்ணீரை வைத்தும் வீட்டை துடைப்பது அவசியம்.