வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. இனி வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் (HCL) ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. மறுபுறம், அக்டோபர் 1 முதல், டிசிஎஸ் (TCS) ஹைப்ரிட் பாலிசியையும் ரத்து செய்துள்ளது. அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தே கடந்த சில வருடங்களாக பணியாற்றிய ஊழியர்களுக்கு தற்போது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.