பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் கொரோனா நோய் தொற்றுக்கு முன்பே வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகின்றது. சமீபத்தில் டெல் நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தொலைதூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றலாம். ஆனால் அவர்கள் இனி பதவி உயர்வுகளுக்கு தகுதி பெற மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி தற்போது தொழில்நுட்பத் துறையில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.