பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அதன்படி நேற்று நடைபெற்ற 103 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை நாம் அனைவரும் முழு உற்சாகத்துடன் கொண்டாடுகின்றோம். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.