உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டா சார்ஜிக்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.