சீரியலில் நடித்து வந்த சம்யுக்தா-விஷ்ணுகாந்த் காதலித்து திருமணம் செய்த சூழலில், ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டனர். இதில் சம்யுக்தா ஒரே சமயத்தில் 2 பேருடன் காதலில் இருந்தார் என்று ஆடியோ ஆதாரம் விஷ்ணுகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டது. அதாவது, விஷ்ணுகாந்த உடன் காதலில் இருக்கும் போதே ஏன் ரவி உடன் பேசிக்கொண்டிருந்தாய் என ஒரு நபர் கேட்டார். அதற்கு சம்யுக்தா “அவர் தன்னிடம் தவறாக நடந்தார்.

அதனை அவர் வாயால் ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என்று தான் பேசினேன் என பதில் கூறினார். இந்த நிலையில் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “யாரோ ஒருவர் என்னை காதலித்து அதை நான் மறுத்தால், அதற்கு நான் பொறுப்பா?. 6 வருடம் உழைத்து நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். கன்டென்ட்டுக்காக ஒருவரது வாழ்க்கையை அழிக்கின்றனர் என கோபமாக தெரிவித்து இருக்கிறார் ரவி. இந்த அறிக்கையை நடிகை வெண்பா வெளியிட்டிருக்கிறார்.