தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் ‘சரக்கு’ படத்தில் ஹீரோவாக  நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள், இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் ரூ.100 கோடி வைத்துக் கொண்டு விஷாலை வைத்துதான் படம் எடுக்க வேண்டுமா? என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சின்ன படங்களை எடுத்துக் கொண்டு வராதீர்கள் நஷ்டம் ஏற்படுகிறது என்று விஷால் சொன்னது தவறு, அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஷால் நடிகர் சங்க தலைவராக அப்படி சொல்லக் கூடாது. பான் இந்தியா படமாக எடுத்தால் தான் சினிமா பார்க்க வேண்டும் என்பது இல்லை என்றார்