விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் அளவுக்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தால் மக்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு உள்ளது உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை எதிர்க்கிறேன் என்றும் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை ஆதரிக்கிறேன் என்றும் இரண்டு தரப்பினர் விவாதம் நடைபெற்று உள்ளது.

அதில் வெளியான ப்ரோமோவில் மாமியார் ஒருவர் அசலில் பெண் எடுத்தாள் அளவிற்கு அதிகமான வரதட்சணை கேட்கலாம் எனவும் அதே சொந்தங்களில் பெண் எடுக்கும் போது அவர்கள் தரும் அளவு தான் வாங்க முடியும் எனவும் சொந்தங்களுக்குள் பேரம் பேச முடியாது எனவும் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சொந்தங்கள் வைத்திருக்கும் நகைகளை மற்றவர்களிடம் கூற மாட்டார்கள் எனவும் அசலில் பெண்  எடுப்பது நகைக்காக மட்டுமல்ல என இந்த விவாதம் சண்டையாக மாறி உள்ளது. தற்போது அது தொடர்பான புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.