பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14வது தவணைத் தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அறிவித்துள்ளார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கி பயன்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.