பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ₹2000 இந்த முறை காலதாமதாக வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்கும் இந்தத் திட்டத்தில் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாகிறது.