தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 181 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு வறட்சி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 181 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழையில் போதிய மழை இல்லாததால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.