சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி ஒருவர் பள்ளி வகுப்பு முடிந்து தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காலணி வழியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு மாடுகளில் ஒன்று எதில் வந்த சிறுமியை தூக்கி வீசி கொடூரமாக தாக்கியுள்ளது. அதன் பிறகு அங்கிருந்து ஒருவர் தடியை கொண்டு அந்த மாட்டை அடித்து விரட்டி சிறுமியை காப்பாற்றினார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.