நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 14 தவணை பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 15 வது தவணைக்காக 18,000 கோடியை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகையையும் விடுவிப்பது குறிப்பிடத்தக்கது.