டெல்லியின் பிரேம் நகர் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயதுச் சிறுவன் ஒருவனைப் பிட்புல் (Pitbull) நாய் ஒன்று கடுமையாகத் தாக்கியது. திடீரென நடந்த இந்தத் தாக்குதலில் சிறுவனின் வலது காது கிட்டத்தட்ட அறுந்து விழுந்து, அவனுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது.
दिल्ली के प्रेम नगर इलाके में एक पिटबुल कुत्ते ने 6 साल के बच्चे को बुरी तरह घायल कर दिया। बच्चा गली में खेल रहा था तभी वहीं खड़े पिटबुल ने छूटते ही हमला कर दिया और उसका कान काट दिया। बच्चा इस समय सफदरजंग अस्पताल में भर्ती है जहां उसका इलाज चल रहा है। घटना का वीडियो भी सामने आया… pic.twitter.com/hox8ScR6DR
— Hindustan (@Live_Hindustan) November 24, 2025
சிறுவன் தற்போது சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தகவல் அறிந்த காவல் துறையினர், நாயின் உரிமையாளரான ராஜேஷ் பாலைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம், ஆபத்தான செல்லப் பிராணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் பொறுப்பு பற்றி மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
