பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் – பொன் பாலகணபதி, சென்னை வடக்கு – பால் கனகராஜ் திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி ராமலிங்கம், விருதுநகர் – ராதிகா சரத்குமார் போட்டியிடுகின்றனர்.

மேலும் திருப்பூர் – ஏ பி முருகானந்தம், பொள்ளாச்சி – வசந்தராஜன், கரூர் – செந்தில்நாதன், தென்காசி – ஜான்பாண்டியன், சிவகங்கை – தேவநாதன், மதுரை – ராம சீனிவாசன், நாகப்பட்டினம் (தனி)- ரமேஷ், தஞ்சாவூர் – முருகானந்தம், சிதம்பரம் (தனி) – பி. கார்த்தியாயினி, புதுச்சேரி – நமச்சிவாயம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜான் பாண்டியன், தேவநாதன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இடைத்தேர்தல் நடைபெறும் விலங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து நிலையில், அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.