விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்துள்ளார். டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், கே.ஜி. ரமேஷ்குமார், எஸ்.சதீஷ், எஸ். ஷாஜி, எபினேசர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.