பெருவெள்ளம், பேரிடர் காலங்கள் தொடங்கி, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மக்கள் இயக்கம் கட்சியாக மாறிய பின்னரும் உதவிகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக தீக்கிரையானது.

இந்த தகவலறிந்த விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அந்த குடும்பத்தை இன்று நேரில் சந்தித்து அவருக்கு ₹30,000 பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவினர்.