கடந்து சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சவரன் ஒன்றுக்கு 400 ரூபாய் உயர்ந்து 45,440 ரூபாய்க்கு வீரப்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 680 ரூபாய் என விற்கப்படுகிறது. இரண்டே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலையால் தங்கம் என்பது நடுத்தர குடும்பத்தினருக்கு எட்டா கனியாக மாறி வருவது வருத்தத்தை ஏற்படுகிறது.