விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்..

விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. தீப்பெட்டி தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும்போது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.