விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் இரவு ஷிப்ட்களில் பணியாற்றும் விமானிகளின் அதிகபட்ச பணி நேரத்தை 13 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாகவும், இரவு விமானம் தரையிறக்கத்தை ஆறிலிருந்து இரண்டாகவும் குறைத்துள்ளது. வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமான பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.