விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் செல்லமா, கேளடி கண்மணி ஆகிய தொடர்களிலும் நடித்து உள்ளார். இந்த நிலையில் திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது “படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமான பயணத்தின்போது நான் நன்கு தூங்கிகொண்டிருந்த சமயத்தில் ஒருவர் பின் சீட்டிலிருந்து தன் மீது கை வைத்தார்.

அதை அறிந்த நான் அவரை பயங்கரமாக அடித்தேன் என பேட்டியில் தெரிவித்தார். மேலும் இதுபோன்று தவறாக நடப்பவர்களை சும்மா விடக்கூடாது என கூறி இருக்கிறார். அதோடு மீடியாவில் வெளிப்படையாக எதுவுமே பேச முடியவில்லை. அதன் காரணமாக தான் பேட்டியில் கூட என்னால் எதையும் வெளிப்படையாக கூற முடியவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.