இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பெரும் விபத்திலிருந்து தப்பித்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையை தொட்டது. விமானிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்ட விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து விமானம் சேதமடைந்த காரணத்தால் அதன் சேவைகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.