ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை விடுதி ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு 6-க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக சுருங்கவரப்பு சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட சிகிச்சைக்கு பின் 14 மாணவர்கள் குணமடைந்து இருப்பதாகவும், மீதமுள்ள 10 மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகளின் உடல் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக விடுதி வார்டன் கூறியுள்ளார். விடுதியில் புளியோதரை சாப்பிட்ட 24 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.