நடிகர் விஜய்யை தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சியை தொடங்கவுள்ளார் எனறும், நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்த விஷால் இன்று காலை 10 மணிக்கு கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியான நிலையில் தனது மக்கள் பணி இயக்கத்தின் மூலம் பணி தொடரும் என நடிகர் விஷால் அறிவித்தார்.

நிலையில் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா மாதிரி நிறைய சம்பாதித்துவிட்டு விஷால் அரசியலுக்கு வரட்டும் என்று அவரது தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு அரசியலுக்கு போக வேண்டும் என்பதே ஒரு அப்பாவாக எனது விருப்பம். சிவாஜி, சிரஞ்சீவின்னு எத்தனையோ பேர் அரசியலுக்கு வந்து என்ன ஆனாங்கன்னு தெரியும். அதனால், சரியான திட்டமிடலுடன் விஷால் அரசியலுக்கு வரணும், என்றார்.