நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்றும் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தி விடுவார்கள் என்றும் பேசி இருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

இதற்கு பல அரசியல் தலைவர்கள் வரவேற்பும் தெரிவித்தனர். இந்நிலையில்  விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணிக்கு அழைப்பு விடுப்போம் என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு விஜய் பரிசுகள் கொடுத்த நிகழ்ச்சி அவரது அரசியல் அத்தியாயத்தின் தொடக்கப் புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்தால் எங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்று காங்கிரஸ் சொல்லியிருந்த நிலையில் தற்போது பாஜகவும் அதையே சொல்லியிருக்கிறது.