கன்னியாகுமரி, விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கன்னியாகுமரி தொகுதி கொடுக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்தன.

ஆனால், மீண்டும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.