இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்த ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், 15 க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம், ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றோம், சின்னத்தை பெறுவதற்காக தான் தேர்தலில் களம் இறங்குகிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.