தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை அவரது இறுதி சடங்கு ரசிகர்கள் சூழ நடைபெற்றது. இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு பேச்சு வராமல் போனதற்கும், கை கால்கள் செயலிழந்து முடங்கியதற்கும் செய்வினை தான் காரணம் போல் தெரிவதாக இயக்குனரும் இசையமைப்பாளருமான  கங்கை அமரன் பீதியை கிளப்பியுள்ளார். இது குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்துக்கு அமெரிக்கா உட்பட உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் அளிக்கப்படும் அவர் பழைய தெம்புடன் குணமடையாமல் போனது ஏமாற்றம் அளித்தது. விஜயகாந்துக்கு இறக்கும் வயதே இல்லை. இன்னும் எவ்வளவோ காலம் அவர் இருந்திருக்க வேண்டியவர் என்று நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது என தெரிவித்துள்ளார்.