விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் 100 நாட்களைக் கடந்து பைனல் நடைபெற உள்ள நிலையில் இந்த வாரம் போட்டியாளர் ரவீனா எவிக்ட் செய்யப்படுகிறார்.

இந்த நிகழ்ச்சி தற்போது 89 நாட்களைக் கடந்து முடிவு பெறும் தருவாயை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ரவீனா வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தள வாக்கெடுப்பில் நிக்க்ஷன் மற்றும் மாயாவை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தவர் ரவீனா என்பது குறிப்பிடத்தக்கது.