டிசம்பர் 28 அன்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அரசியல் பிரமுகர்கள் திரைத்துறையினர் என பலர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் தொடர்ந்து நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின் இரண்டு மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.