மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கை, தனது பெயருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாற்றியுள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமானார். அவர் மறைந்து 2 வாரங்கள் கடந்துள்ள நிலையில், விஜயகாந்த்-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கு பிரேமலதா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதால் விஜயகாந்த் ரசிகர்கள், நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த கணக்கில், ‘தேமுதிக பொதுச் செயலாளர் w/o புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என மாற்றப்பட்டுள்ளது. தேமுதிக பொருளாளராக இருந்த பிரேமலதா, கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடந்த கட்சி பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக, விஜயகாந்த்தால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.