தமிழகத்தில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை டூரிஸ்ட் பர்மீட்டு பெறாமல் சவாரியாக பதிவு செய்து இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் சொந்த வாகனங்களை வடிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டூரிஸ்ட் உபயோகத்திற்கான டி போர்டு பர்மிட் வழங்கப்படுகின்றது. இதனை மீறி முறையான டூரிஸ்ட் பர்மிட் பெறாமல் சொந்த வாகனங்களை அரசின் விதிமுறைகளை மீறி பயன்படுத்துவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 5 ஆயிரத்து 273 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் 155 வாகனங்கள் விதியை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படும் என அரசு எச்சரித்துள்ளது. சொந்த உபயோகத்திற்கு வாங்கக்கூடிய வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.