விஜயகாந்திற்கு 2016ம் வருடத்திற்கு பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசியல் இருந்து மெல்ல ஒதுங்கினார். பல பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்த இவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன்பு போல இப்பொழுது அவரால் சரளமாக பேச முடியவில்லை . உடல் பாதைகள் காரணமாக வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார் பிறந்தநாள் மற்றும் விழா நாட்கள் மட்டுமே அவருடைய புகைப்படங்கள் வெளியாகும்.

இவரை அவருடைய மகன் விஜய் பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தான் கவனித்து வருகிறார்கள் இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் இடம் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு கேப்டன் நல்லா இருக்காரு சூப்பரா இருக்கிறார் நூறு ஆண்டு காலம் நம்மோடு இருந்து நம்ம எல்லாம் வழி நடத்துவார் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் . கடவுள் பதில் சொல்லியே ஆக வேண்டும் நல்லவர்கள் வாழ்ந்ததாகவே சரித்திரம் இருக்க வேண்டும் தவிர வீழ்ந்ததாக சரித்திரம் இருக்கக் கூடாது அதை விஜயகாந்த் போன்ற நல்லவர்கள் வாழ வேண்டும்.

இறைவனிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான் விஜயகாந்த் நல்லவர் அவர் 100 வயது வாழ வேண்டும். விஜயகாந்த் போல என் மகன் விஜய் பிரபாகரனும் உமுன்மையை மட்டும் தான் வெளிப்படையாக பேசுவார் . அவரிடம் விஜயகாந்த் உடல்நிலை பற்றி கேட்டதற்கு நன்றாக இருக்கிரார். உடல்நிலையில் தான் சற்று தொய்வு இருக்கிறது என்று சொன்னார் உடனே ஊடகங்கள் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு என்று செய்திகள் போட்டு விட்டார்கள். அவருடைய உடல் நிலையில் எந்த பின்னடையும் இல்லை என்று கூறியுள்ளார்.