விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இன்று சென்னை முழுவதும் வணிக நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.