எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எல்.ஐ.சி நிறுவனம் புதிய ஜீவன் ஷாந்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஓய்வு பெற்றவுடன் காலம் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்தில் தனிநபராகவோ அல்லது இணைந்தோ கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் 1.50 லட்சம் முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1000 பென்ஷன் பெறுவீர்கள். இந்த திட்டம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகவும்.