வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் நாஐந்து ட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும். இது தொடர்பாக இந்தியன் வங்கி சங்கம் (ஐபிஏ) கூட்டம் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 28ஆம் தேதி நடக்கும் இந்தக் கூட்டத்தில் வங்கி விடுமுறை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. தற்போது 2வது மற்றும் 4வது வாரங்களில் சனிக்கிழமைகளில் வங்கிகள் பாதி நேரம் இயங்கி வருகிறது. புதிய உத்தரவு அமலுக்கு வந்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தான் சிரமம் ஏற்படும்.