இடைக்கால பட்ஜெட்டில், வாரத்தில் 3 நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க போவதாக சமூகவலைத்தளத்தில் ஒரு செய்தியானது தீயாய்  பரவியது. அதில், ஜூலை 1 முதல் தினமும் கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என செய்தி  பரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தியானது ‘இது முற்றிலும் பொய்யான தகவல். இதுபோன்ற எந்த முன்மொழிவும் அரசிடம் இல்லை’ என PIB Fact Check தனது X பதிவில் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.