அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றின் ஓரமாக முதலை ஒன்று படுத்து கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் வன அலுவலர்கள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் 4 அடி நீளம் கொண்ட அந்த முதலையை பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை விடப்பட்டுள்ளது.