ஈரோடு பவானியை அடுத்துள்ள மூன்றோடு கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகளுடன் தனது சகோதரன் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று கண்ணகி அருகே இருந்த கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கண்ணகி அணிந்திருந்த இரண்டு பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பவானி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.