கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 30க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிதறால் பகுதியை சேர்ந்த பணியாளர் ஒருவர் சமீபத்தில் விலை உயர்ந்த புதிய பைக் வாங்கியதுடன் வீடு கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

திடீரென எப்படி இவ்வளவு பணம் அவருக்கு கிடைத்தது என்று சந்தேகம் அடைந்த நகைக்கடை உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சிதறால் பகுதியை சேர்ந்த பணியாளர் ஒவ்வொரு நாளும் சிறிய அளவிலான தங்கத்தை திருடியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.