வங்கி காசோலையில் கையொப்பமிடுவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவைதான். காசோலையில் நீங்கள் எழுதும் தொகைக்குப் பிறகுதான் ஒன்லி (ONLY) என எழுத வேண்டும். வெற்று காசோலைகளில் கையெழுத்திட வேண்டாம். கையொப்பமிடுவதற்கு முன் பணம் பெறுபவரின் பெயர், எடுக்க வேண்டிய தொகை மற்றும் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

இல்லையெனில், வெற்று காசோலையை மாற்றி சிலர் நிதி முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. சரியான கையெழுத்தை இட வேண்டும். கணக்கில் சரியான பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காசோலை எண்ணை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.