நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை முடிக்க கால கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர் வைத்திருக்கும் கிளையை தொடர்பு கொண்டு திருத்தப்பட்ட மற்றும் துணை லாக்கர் ஒப்பந்தத்தை பொருத்தும் படி செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாடிக்கையாளர்கள் உடைமைகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட மற்றும் துணை லாக்கர் ஒப்பந்தத்தை வங்கி வெளியிட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு லாக்கர் இருக்கும் வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு ஒப்பந்தத்தில் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் கையெழுத்து இட வேண்டும் என sbi வங்கி தெரிவித்துள்ளது.