ரயில்வே விதியின் அடிப்படையில் தட்கல் கோட்டா டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு ரயில் புறப்படுவதற்கு ஒருநாள் முன்பு தான் துவங்குகிறது. உதாரணமாக 27ம் தேதியன்று பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், 26ம் தேதி தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யவும். அதே நேரம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) (IRCTC.CO.IN) இணையதளத்தில் இருந்தும் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

யுடிஎஸ் மற்றும் முன் பதிவு டிக்கெட் கவுன்டர் உள்ள சில சிறிய நிலையங்களிலும் தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யலாம். தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தை ரயில்வே அமைச்சகமானது தொடர்ந்து மாற்றி வருகிறது. இவ்வசதி துவங்கிய போது காலை 8 மணிக்கே முன்பதிவு செய்து வந்தது. அதன்பின் அதன் நேரம் பகல் 10 மணியாக மாற்றப்பட்டது. இந்நேரத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போது ​​தட்கல் டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு நேரம் ஏசி மற்றும் ஏசி இல்லாத வகுப்புகளுக்கு வெவ்வேறாக இருக்கிறது.

ஏசி வகுப்புக்கான தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன் பதிவு காலை 10 மணிக்கு துவங்குகிறது. ஏசி அல்லாத வகுப்பு டிக்கெட்டுகளுக்குரிய முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்குகிறது. ரயில்களுக்கான தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பாக அதற்கான கட்டணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். சாதாரண டிக்கெட்டுகளை விடவும் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய ரயில்வே அதிக கட்டணம் வசூல் செய்கிறது. ஸ்லீப்பர் வகுப்புக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதமும், ஏசிக்கான அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.

எனினும் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் தட்கல் கட்டணத்துக்கு உச்ச வரம்பு இருக்கிறது. ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.100-200, ஏசி சேரில் 125-225 ரூபாய், ஏசி3 வகுப்பிற்கு 300-400 ரூபாய், ஏசி2ம் வகுப்பிற்கு 400-500 ரூபாய், எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காரில் தட்கல் கட்டணம் ரூ.400-500 வரை மட்டுமே ஆகும். சாதாரண டிக்கெட்டுகளை போன்றே தட்கல் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ரத்து தொடர்பான அதன் விதிகள் சற்று வித்தியாசமானது ஆகும். இதற்கிடையில் உங்களது தட்கல் டிக்கெட் கர்பார்ம் ஆன டிக்கெட் எனில், அதனை ரத்துசெய்து விட்டால் ஒரு ரூபாய் கூட திரும்பப்பெற இயலாது. உங்களது தட்கல் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருப்பின், வழக்கமான ரத்து விதிகள் அனைத்தும் பொருந்தும்.