உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் சீரியல் பார்க்கும் தனது மனைவியை தொலைக்காட்சியை பார்க்கக்கூடாது என கணவர் தடைவிதித்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி துப்பாக்கியால் சுடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து கணவர் தலைமறைவானார். பாதிக்கப்பட்ட அப்பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் ராம்பூரின் ஸ்வார் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சமோடியா கிராமத்தில் அரேங்கேறியுள்ளது. அதாவது, ஷியாம்லாலின் மனைவி வீட்டில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.