தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும்  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில்  பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் இன்று (ஜன., 3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, ஜன., 8 வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க, ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் பயனாளிக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். அதை வைத்து பயனாளர்கள் பொங்கல் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.