தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12 மாத வயது கொண்ட குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.  சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுகுட்டப்பட்ட  குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். போலியோவை தடுப்போம். எதிர்கால சந்ததிகளை காப்போம்.