அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டை சரிசெய்ய மே 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.