மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி வரை (5 நாள்கள்) டிரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவித்துள்ளார்.