அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் ராகுல் காந்தி இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஆனால் ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது