அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் ராகுல் காந்தி இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்., திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடவுள்ளார். எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிட போகிறார் என ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.